டில்லி

ன்று மன் கி பாத் (மனதின் குரல்) என்னும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.

இந்திய வானொலியில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்  மன் கி பாத் (மனதின் குரல்) என்னும் நிகழ்வில் மோடி பேசி வருகிறார்.   அவர் ஒவ்வொரு மாதமும் கட்சி ஞாயிறு அன்று தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.   இந்த வருடம் கடைசி ஞாயிறான இன்று மோடி உரையாற்றினார்.

இன்றைய உரையில் பிரதமர் மோடி, “இன்றைய இளைஞர்கள் அராஜகம், குழப்பம் ஆகியவற்றை அறவே வெறுக்கிறார்கள். இளைஞர்கள் சாதி பார்த்தல், தகுதியற்றவர்களுக்கு உறவு, நட்பு அடிப்படையில் சலுகை செய்தல், சார்புத்தன்மை பாலினப்பாகுபாடு, நிர்வாகமின்மை ஆகியவற்றை விரும்பவில்லை.

இளைஞர்கள் சாதியற்ற அமைப்பு முறையை வரவேற்கிறார்கள் என நான் நம்புகிறேன் அத்துடன் அவற்றைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள்.  அதே வேளையில் இந்த அமைப்பு முறை சரியாகச் செயல்படாவிட்டால் அதிருப்தி அடைந்து, துணிச்சலாகக் கேள்வியும் கேட்கிறார்கள்.  அவர்களது  இந்த பண்பை நான் நல்ல ஒழுக்கமானதாகக் கருதுகிறேன்

புதிய மற்றும் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதிலும், மேம்பாட்டிலும் வரும் 10 ஆண்டுகளுக்கு இந்தியாவில் உள்ள இளைஞர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன்.   அதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோன்று சக்தி நிரம்பிய, உற்சாகம் நிறைந்த, ஆற்றல் வாய்ந்த இளைஞர்கள் மாற்றத்தை விளைவிப்பார்கள்

நமது நாட்டில் எங்கெல்லாம் குழப்பங்கள், நிகழ்கிறதோ அந்த சம்பவங்களை இளைஞர்கள் துணிச்சலாக வீடியோவாகப் பதிவு செய்து, தவறு செய்தவர்களை உணர வைக்கும் நம்முடைய புதிய தலைமுறை இளைஞர்கள் புதிய வடிவமானவர்கள்.  அவர்கள்  புதிய முறையின் பிரதிபலிப்பு மற்றும் புதிய சிந்தனை கொண்டவர்கள்,  அவர்கள் புதிய காலத்தில் இருக்கிறார்கள். இந்தியா இந்த தலைமுறையை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளது. இந்த தலைமுறையினருக்கு நாட்டை மிகப்பெரிய உயரத்துக்கு உயர்த்துவதற்குத் தகுதி உள்ளது

பொதுமக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரித்த பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி, சுதேசி பொருட்களை ஊக்கப்படுத்த வேண்டும். வரும்  2022-ம் ஆண்டில் நாம் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். ஆகவே இளைஞர்கள், மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரித்த பொருட்களுக்கு ஊக்கம் அளித்து, உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு வாழ்வளித்து, வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும்.

பல உறுப்பினர்கள் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமான முறையில் நடத்தியுள்ளார்கள். இம்முறை  கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சிறப்பாக நடந்துள்ளது.   அதற்கு எனது பாராட்டுக்கள்.  வரும் புதிய 10 ஆண்டில் புதிய தீர்மானங்கள், புதிய உற்சாகத்துடன், புதிய ஆர்வத்துடன், புதிய வைராக்கியத்துடன் தொடங்க வேண்டும்.

தற்போது நாம் நீண்ட தொலைவு கடந்து பலசாதனைகளைப் படைத்து. புதிய உயரத்துக்கு நாட்டைக் கொண்டு சென்றிருக்கிறோம்.  நமது நாட்டின் 130 கோடி மக்களின் திறமையில், செயலில் அபரிமிதமான நம்பிக்கையைக் காண்பிப்போம்” எனக் கூறி உள்ளார்.