தனது நிறுவனங்களின் பேரில் யாரேனும் பணப் பரிவர்த்தனை செய்தால், ஒப்பந்தகளை மேற்கொண்டால் அதற்கு தான் பொறுப்பல்ல என இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து படம் தயாரித்ததால், படத்தயாரிப்பில் சில சிக்கல்களைச் சந்தித்தார் யுவன். இந்நிலையில், தனது நிறுவனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் யுவன்.

“எனது நிறுவனம் ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் சார்பில் நான் இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை. அப்படி என் பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் ஏதும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

என்னைத் தவிர ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் பணப் பரிவர்த்தனை செய்ய அதிகாரம் இல்லை. தங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி”. இவ்வாறு யுவன் தெரிவித்துள்ளார்.