சென்னை:

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி வழங்க தேவையான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும், சில தனியார் நிறுவனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கடைகளுக்கு போன் செய்தால் போதும்… உங்களுக்கு தேவையான பொருடகள் வீடுதேடி வரும்.

இந்த சேவை,  தற்போது முதல்கட்டமாக வளசரவக்கம் (மண்டலம் 11), ஆலந்தூர் (மண்டலம் 12), ஆதம்பாக்கம் (மண்டலம் 13), பெருங்குடி (மண்டலம் 14), சோலிங்கநல்லூர் (மண்டலம் 15) ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து மண்டலம்  வாரியாக முக்கிய கடைகள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள கடைகளின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான பொருட்கள் குறித்து ஆர்டர் செய்தார், அந்த கடைகளின் ஊழியர்கள் வீடுகளுக்கே வந்த டெலிவரி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Zonewise Supermarkets with home delivery – Click to download