அமராவதி:
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை தொலைத்துளைள துணி துவைத்தல் பணி செய்யும் சலவைத் தொழிலாளர்கள், முடிவெட்டும் சலூன் தொழிலாளர்கள், துணி தைக்கும் தையல் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்க  என ஆந்திர மாநில முதல்வர்  ஜெகன்மோகன் ரெட்டி  உத்தரவிட்டு உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக கூலித்தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர் கள், புலம்பெயர் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டுமின்றி நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.